வேலூர் மாவட்டம் ,முன்னாள் துணை இராணுவ படை வீரர்களின் வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி விலக்கு சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு சார்பாக வழங்கினர்.
வேலூர் மாவட்டம் , இந்திய நாட்டின் எல்லையில் உள்ள பாக்கிஸ்தான் -பங்களாதேஷ் எல்லையில் BSF ம்,இந்திய திபெத் எல்லையில் ITBP மற்றும் இந்திய சீனா எல்லையை SSB ம்,இந்திய மியான்மரை AR, CRPF மற்றும் CISF ம் தினமும் போர் முனையில் சந்திக்கும் சூழ்நிலையில் பனி நிறைந்த ஜம்மு காஸ்மீர் பாலைவனம் நிறைந்த ராஜஸ்தான் சதுப்பு நிலம் நிறைந்த குஜராத் வெள்ளம் சூழ்ந்த பங்களாதேஷ் எல்லையில் அனைத்தையும் துணை ராணுவபடை ஆகிய நாங்களே பாதுகாத்து கொண்டு இருக்கின்றோம் தனது இன்னுயிரை பனயம் வைத்து தாய்நாட்டை காப்பாற்றி வருகின்றனர். இவ்வாறு,அணைத்து கடினமாக சேவைபுரிந்து ஓய்வு பெற்றும் மற்றும் வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்தினர் சுமார் 15000 உறுப்பினர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ளனர் அவர்களுக்கு வீடு மற்றும் குடிநீர் வரி விலக்கு வேண்டி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மூலம் கோரிக்கை மனு வழங்கினர்.