Posts

வேலூர் மாவட்டம், வேலூர் வள்ளலார் , 12வது கிராஸ் வீதி பேஸ் 1ல் ஜே..எஸ். கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது

Image
வேலூர் மாவட்டம், வேலூர் வள்ளலார் , 12வது கிராஸ் வீதி பேஸ் 1ல் ஜே..எஸ். கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது முகாமில் இசிஜி இரத்த கொதிப்பு ஸ்கிரீனிங் இருதய ஸ்கிரீனிங், கல்லீரல் ஸ்கிரீனிங், தைராய்டு ஸ்கிரீனிங், உள்ளிட்ட நோய்களுக்கு  இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச ஆலோசனைகள் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் வழங்கினர்.9நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இலவச மருத்துவ முகாமில்  அவசர மற்றும் பொது மருத்துவர்  டாக்டர் ஜான் கிப்ட் சன், மற்றும்அரசு உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பொது மற்றும் மகளிர் சுகாதார மருத்துவர் டாக்டர். கண்மணி ஆகியோர் மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் வேலூர் மின் திட்டம் காந்திநகர் மின்சார பிரிவு அண்ணா தொழில் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது

Image
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் வேலூர் மின் திட்டம் காந்திநகர் மின்சார பிரிவு அண்ணா தொழில் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது இதில்  அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதில் சிறப்பு அழைப்பாளர் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ். ஆர் .கே. அப்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் மின் திட்ட செயலாளர் கதிரவன், மின் திட்ட தலைவர் தாமோதரன் ,அண்ணா தொழிற்சங்கம் அண்ணாமலை, பெல் ராஜேந்திரன்  ,வண்ட்றந்தாங்ல்  ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் , குத்தா மோட்டூர் தலைவர் திருமால், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக கோட்ட செயலாளர் ஆர் .ராஜேஷ் நன்றி உரையாற்றினார்.

வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், காங்கேயநல்லூர் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரை பெருவிழா.

Image
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், காங்கேயநல்லூர் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரை பெருவிழாவில் சிறுசு ஏற்றம் நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் ஆராதனைகளும் பக்தர்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் காங்கேயநல்லூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் அனுமன் பக்த சபா சார்பில் சிரசு ஏற்றும் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு விழா குழுவினர்கள் சார்பில் அன்னதானம் வழங்கினர். .

வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது .

Image
வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளர் அதிமுக வேலூர்  மாநகர மாவட்டச் செயலாளர் எஸ் .ஆர். கே  .அப்பு கலந்துகொண்டு நீர் மோர் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார் இதில் தலைவர் பிரபு செயலாளர் சதீஷ் ,துணைத் தலைவர் கணேசன், துணைச் செயலாளர் கணேசன் , மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம் ,வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உழைப்பாளர்கள் தின விழாவினை முன்னிட்டு ஆட்டோ சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் குளிர்பானங்கள் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
வேலூர் மாவட்டம் ,வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உழைப்பாளர்கள் தின விழாவினை முன்னிட்டு ஆட்டோ சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் குளிர்பானங்கள் உணவு வழங்கும் நிகழ்ச்சி தலைவர் ராஜா தலைமையிலும், செயலாளர் தீனன், பொருளாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் விதன் குமார், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது .இதில் ஆட்டோ ஸ்டாண்ட் உறுப்பினர்கள் ,பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் வள்ளலார் ஸ்ரீ லட்சுமி மினி ஹாலில் வேலூர் மாவட்ட ஆட்டோ பழுது பார்போர் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் உழைப்பாளர் தின விழா நடைபெற்றது

Image
வேலூர் மாவட்டம் வேலூர் வள்ளலார் ஸ்ரீ லட்சுமி மினி ஹாலில் வேலூர் மாவட்ட ஆட்டோ பழுது பார்போர் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் உழைப்பாளர் தின விழா நடைபெற்றது இதில் மாவட்ட கௌரவ  தலைவர் எஸ் .பி. என் .ராஜ நந்தனன் ,மாவட்ட சட்ட ஆலோசகர் பி. ராஜகுரு, மாவட்ட தலைவர் எம். தாமோதரன், மாவட்டச் செயலாளர் ஜி .ஜி. என். ராஜி ,மாவட்ட பொருளாளர் ஆர். ஐயப்பன் ,மாவட்டத் துணைத் தலைவர் பழனிவேல் ,மாவட்டத் துணைச செயலாளர் முரளி, மாவட்ட துணை பொருளாளர் ஆர். சுரேஷ் பாபு, மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் ஊசூர் அடுத்த அத்தியூர் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஓம் வேம்பு மாரியம்மன் சக்தி பீடத்தில் மகா கும்பாபிஷேக விழா .

Image
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் ஊசூர் அடுத்த அத்தியூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஓம் வேம்பு மாரியம்மன் சக்தி பீடத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கோ பூஜை யாகசாலை பூஜைகள் சிறப்பு ஹோமங்கள் கடம் புறப்பாடு விமான கோபுரம் கலசத்திற்கு கும்பாபிஷேகமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் திருமலைகோடி  ஸ்ரீபுரம் சக்தி அம்மா  கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவினை துவக்கி வைத்தார் இதில் வேம்பு சாமிகள் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.