வேலூர் மாவட்டத்தில் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்.
வேலூர் மாவட்டம் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்.
நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கைகள் சமர்பிக்க 10 முதல் 17 வரையுள்ள மாணவ மாணவிகள் பங்கேற்கும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான குழந்தைகள் பயிற்றுவிக்க வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் இன்று 02.09.2025 காலை 10 மணியளவில் வேலூர் சாய்நாதபுரம் டி.கே.எம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) கூட்ட அரங்கில் நடைபெற்றது.
வழிகாட்டி ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சு.தயாளன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் ஆர்.பானுமதி முன்னிலை வகித்து பேசினார்.
கல்லூரியின் செயலாளர் டி.மணிநாதன் பயிற்சியினை தொடக்கி வைத்து பேசினார். முன்னதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.
மாவட்டக்கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் ப. ரமேஷ்பாபு, பயிற்சி கையேடு வழங்கிப் பேசினார். மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா மாநாட்டிற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இல.சீனிவாசன், வேலூர் கிளைத்தலைவர் பேராசிரியர் கே.தேவி, செயலாளர் முத்து.சிலுப்பன், பொருளாளர் பா.சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
மனநல மருத்துவர் ஜுபைதா சுல்தானா மன நலம் குறித்து கருத்துரையாற்றினார்.
நீரினால் பரவும் நோய்கள், நீர் பாதுகாப்பில் பாரம்பரிய நவீன தொழில்நுட்ப யுக்கத்திகள், நீர் சார்ந்த சுகாதாரமும் பொது மருத்துவமும், நீர் சூழலும் பாதுகாப்பும், நீர் அனைவருக்குமானது என்ற 5 தலைப்புகளில் ஆக்சிலியம் கல்லூரி பேராசிரியைகள் கர்லின் பிரேமகுமார், சோலாஸ்டிகா, டிகேஎம் கல்லூரி பேராசிரியர் .டி.சசிகலா, விஐடி பல்கலைகழக பேராசிரியர் வேல்விழி மாவட்ட துணைத்தலைவர் கே.விஸ்வநாதன், ஆகியோர் ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கான வழிமுறைகளை செயல் விளக்கம் அளித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் ஆர்.காயத்ரி, மாவட்ட இணை செயலாளர் என்.கோட்டீஸ்வரி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி ககையேட்டினை மாவட்டக் கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் பா. ரமேஷ்பாபு வெளியிடார்.
அறிவியல் மனப்பாண்மையை வளர்க்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணங்களுக்கு வித்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையினரிடம் பெறப்பட்ட அனுமதியின் பேரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளின் படி மாவட்டம் முழுவதும் இருந்து அரசு அரசு உதவிபெறும் பள்ளி, ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி, மற்றும் தனியார் பள்ளி அறிவியல் ஆசிரிய ஆசிரியைகள் 200 பேர் பங்கேற்றனர்.